வியாழன், 25 அக்டோபர், 2012

தெரு முனை பிரச்சாரம்


சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி சாலையூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாலையூர் கிளை சார்பாக 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது.

மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அஹமது, Bsc. அவர்கள் உரையாற்றினார்,
இதில் மத்ஹபில் உள்ள பின்பற்ற முடியாத சட்டங்களும் பின்பற்ற முடிந்தும் மக்கள் பின்பற்றாத சட்டங்களையும் எடுத்துக் கூறி இஸ்லாம் இது குறித்து என்ன  சொல்கிறது  என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் புரியும் விதமாக எடுத்துக் கூறினார்.

இதை ஏராளமான மக்களும் இளைஞர்களும் கேட்டு பயனடைந்தனர்,

பயான்  முடிந்த  உடன் பல இளைஞர்கள் சகோதரர் பாசித் அவர்களை சுற்றி வளைத்து தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.